மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி(DA) உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி(DA) உயர்வு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி(DA) உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி(DA) உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடிய விரைவில் மீண்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி(டிஏ) உயர்வு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, அகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) 3 சதவீதம் வரைக்கும் உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் DA உயர்த்தப்பட்டு தற்போது 31 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு DA 3% உயர்த்தப்பட்டு 34% அகவிலைப்படி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி செயலியில் வருகையை பதிவு செய்ய திணறும் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை கடிதம்
மேலும், மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இந்த மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும், செப்டம்பர் மாதம் முதல் புதிய அகவிலைப்படி சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் மத்தியப் பிரதேச அரசுக்கு ரூ.625 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட ஏழு கோடிக்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.