LPG சிலிண்டர் பயன்படுத்துவோர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசின் மானியத்தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் சிலிண்டர் பயனர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மானியத்தொகை:
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்த்தபட்ட போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது மத்திய அரசு மானியத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் மானியத்தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இந்த நேரத்தில் மானியத்தொகை சிலருக்கு வரவு வைக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தது. கடந்த வருடங்களில் மானியத்தொகை பலருக்கு குறைக்கப்பட்டதாகவும், சிலருக்கு மானியத்தொகை நிறுத்தப்பட்டதாகவும் கூறினர்.
ஏற்கனவே மக்கள் கொரோனா பெருந்தொற்றால் வருமானம் இழந்து சிரமப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை உயர்வு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வேளையில் மானியத்தொகையும் கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பயனர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு சிலிண்டருக்கான மானியத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.30,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் சிலிண்டர் பயனர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
நீதிபதிகள் பணி ஓய்வு பெறுவதற்கான உச்ச வயது உயர்வு – பார் கவுன்சில் தீர்மானம்!
Exams Daily Mobile App Download
சமையல் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதற்கேற்றவாறு தற்போது மானியத்தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் சிலிண்டருக்கான மானியத்தொகை கூடுதலாகவும், இடை நிறுத்தல் இன்றியும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்