நீதிபதிகள் பணி ஓய்வு பெறுவதற்கான உச்ச வயது உயர்வு – பார் கவுன்சில் தீர்மானம்!
இந்தியாவில் அரசியல்வாதிகள் தவிர மற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஓய்வு வயது உயர்வு:
நாடு முழுவதும் அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையானது அரசியல்வாதிகளுக்கு மட்டும் பொருந்தாது. அரசியல்வாதிகள் மட்டும் தங்களது இறப்பு வரை பணியில் இருக்கலாம். மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் பதவிக்காலம் 65 வயது வரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பதவிக்காலம் 65வயது வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் மற்ற அரசு ஊழியர்களின் பதவிக்காலம் 58 ஆக இருக்கும் நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அதையும் 60 ஆண்டாக உயர்த்தி இருக்கின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது 65 வயது என்பது மிக குறைவு எனவும் அதனை உயர்த்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 65 எனவும், உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது 62 எனவும் இருக்கிறது.
தமிழகத்தில் பரவும் புதிய வைரஸ் – 282 குழந்தைகள் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. தலித் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு உயரும். அதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்