Infosys ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அப்ரைசல் 2 மடங்கு உயர்வு! முழு விவரம் இதோ!

0
Infosys ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அப்ரைசல் 2 மடங்கு உயர்வு! முழு விவரம் இதோ!
Infosys ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அப்ரைசல் 2 மடங்கு உயர்வு! முழு விவரம் இதோ!
Infosys ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அப்ரைசல் 2 மடங்கு உயர்வு! முழு விவரம் இதோ!

இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் TCS, Infosys, Wipro & HCL உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் Infosys நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு துறை நிறுவனங்களும் மிகவும் பாதிப்படைந்தனர். ஆனால் ஐடி துறை நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணி செய்யும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதித்து வருகின்றனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியில் ஈடுபட அழைக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் பெரும்பாலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய விரும்புவதால் அலுவலகத்திற்கு வருவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன் மேலும் நிறுவனங்கள் வற்புறுத்தினால் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர். மேலும் ஒரு நிறுவனத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்திற்குச் செல்வது அட்ரிஷன் என்று அழைக்கப்படுகிறது. அதனால் ஐடி துறை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தக்க வைத்து கொள்ள அட்ரிஷன் விகிதத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் – அரசு முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் எதிரொலி!

மேலும், தற்போது ஐடி துறை நிறுவனங்கள் அந்த வகையில் Infosys நிறுவனம் உள்ளிட்டவை அட்ரிஷன் விகிதத்தை குறைக்க, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.5 மடங்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க உள்ளதாகவும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ESOP பங்குகள் அளவை 2 மடங்கு உயர்த்த உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் பெரும்பாலும் ஊழியர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 27.7 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!