மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு!
ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் ஓன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அப்படி உயர்ந்தால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 34% அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. ஏப்ரல் மாத சம்பளத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகையையும் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசித்தது. இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது. 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான AICP குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. AICP குறியீட்டு எண் ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. அதேபோல், பிப்ரவரி மாதத்தில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் இருந்தது. மேலும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான விவரங்களும் வந்த பிறகு குறியீடு 126 க்கு மேல் சென்றால் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அகவிலைப்படி உயர்ந்தால் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச அடிப்படை சம்பளம்:
- ஊழியர் அடிப்படை சம்பளம் ரூ.56,900 , புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம்
- எவ்வளவு அகவிலைப்படி 21,622 – 19,346 = ரூ.2,276/மாதம் அதிகரிக்கும்
- ஆண்டு ஊதிய உயர்வு 2,276 x 12 = ரூ.27,312 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்:
- ஊழியர் அடிப்படை சம்பளம் ரூ.18,000 , புதிய அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம்
- எவ்வளவு அகவிலைப்படி 6840 – 6120 = ரூ 720/மாதம் அதிகரிக்கும்
- ஆண்டு ஊதிய உயர்வு 720 x 12 = ரூ.8,640 ஆக அதிகரிக்கும்.