ஏர்டெல் பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை!!
இந்தியாவில் அக்.1 ஆம் தேதி முதல் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவை விலையில் 5ஜி சேவையை வழங்க இருப்பதாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
5ஜி சேவை
இந்தியாவில் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், Vi, அதானி குழுமத்தின் அதானி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க தயாராக இருக்கிறது.
இந்நிலையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 4ஜி விலையில் 5ஜி சேவை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெளியிட்ட அறிவிப்பின் படி, தற்போது உள்ள சூழ்நிலையில் 8 முதல் 9 சதவீத 5ஜி ஸ்மார்ட்போன்ளை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் வந்துள்ள அதிரடி மாற்றம்! இனி இவர்கள் கணக்கு தொடர முடியாது!
Exams Daily Mobile App Download
அதனால் 5ஜி சேவை கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டால், பெரிய லாபம் இருக்காது. எனவே இப்போதைக்கு 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவை வழங்க இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகமாக வாடிக்கையாளர்களின் கைக்கு வந்துவிடும் என்றும் அதன் பிறகு 5ஜி சேவைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்