மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் வந்துள்ள அதிரடி மாற்றம்! இனி இவர்கள் கணக்கு தொடர முடியாது!
இந்தியாவில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் முதியவர்களுக்கான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது.
ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் ஏழை எளிய மக்களும் முதுமை காலத்தில் ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. தபால் மற்றும் வங்கிகள் மூலமாக இத்திட்டத்தில் நீங்கள் இணையலாம். இந்த திட்டத்தில் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் சேர்ந்து முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டும் போது ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கப்படும். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் தற்போது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2022 அல்லது அதற்குப் பிறகு சேரும் சந்தாதாரர் வருமான வரி செலுத்தத் தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால் அவரது அடல் யோஜனா கணக்கு மூடப்படும்.
ஒருவழியாக முடிவுக்கு வந்த மின் ஊழியர்களின் போராட்டம் – முதல்வர் நடத்திய பேச்சு வார்த்தை!
Exams Daily Mobile App Download
மேலும் அவர்களின் பணம் திருப்பி செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பான தகவல் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி இந்த அடல் யோஜனா திட்டத்தில் 4.01 கோடி பேர் இணைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ம் தேதிக்கு முன் கணக்கு தொடங்கியவர்கள் இத்திட்டத்தின் பலன்களை தொடர்ந்து பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்