தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் மாதம் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்ற வகுப்புகளுக்கு பாட வாரியாக கால அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மாணவர்களின் பாட சுமையை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
அதே போல நடப்பாண்டும் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மார்ச் 9ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வர்களும் விண்ணப்பிக்க தொடங்கினர்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் இணையதளம் வாயிலாக நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் முறைகள்:
- முதலில் http://www.dge.tn.gov.in என்றஇணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் “HALL TICKET” என்பதை கிளிக் செய்து “SSLC PUBLIC EXAMINATION MAY 2022 – HALL TICKET DOWNLOAD” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்ததாக வரும் பக்கத்தில் விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை பதிவிட வேண்டும்.
- மே 6 ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.