தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை, அதனால் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் சில மாதங்கள் கடைபிடிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 812 இடங்களை நிரப்ப வேண்டும். அதில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்ப வேண்டும். அதற்குள் கால அவகாசம் முடிந்து விட்டதால் நின்று விட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வரவேண்டும் என்கிற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
6 நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறைகள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
மேலும் தமிழகத்தில் முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஹீமோபிலியா எனப்படும் ரத்தம் உறையா நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ExamsDaily Mobile App Download
2010 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர், இந்த நோயாளிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதன் காரணமாக 82% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. கொரோனா பரவல் குறைந்து விட்டாலும், கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. மேலும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமில்லை என்பது தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை. எனவே முகக்கவசம் அணிவது தொடர்பாக விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.