TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள், நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை TNPSC நடத்தி வருகிறது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு வருகிற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளன, இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முழு விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவு அறிவிக்கப்படும். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், செப்டம்பரில் நடைபெறும் மெயின் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படும். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி – முழு ஊரடங்கு அமல்!
இந்நிலையில் குரூப் 2 ஆட்சேர்ப்பு முதற்கட்டத் தேர்வு 2022 இன் ஹால் டிக்கெட்டுகளை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் tnpsc.gov என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2: முகப்பு பக்கத்தில், TNPSC குரூப் 2 ப்ரீலிம்ஸ் அட்மிட் கார்டு இணைப்பை கிளிக் செய்யவும்
Exams Daily Mobile App Download
3: உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் போன்ற தேவையான உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்
4: உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும். சேமித்து, பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அதில் எழுதப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். அதில் அவர்களின் பெயர், பாடங்கள், தேர்வு நடைபெறும் இடம், நேரம், தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நாளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.