நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி – முழு ஊரடங்கு அமல்!
வடகொரியா நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் நேற்று முதன்முறையாக ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தவணை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டுமே 95% மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும், 75% மக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!
உலகம் முழுதும் கொரோனா தொற்றிற்கு கோடிக்கணக்கான மக்கள் ஆளாகினர். ஆனால் இதுவரை வடகொரியாவில் மட்டுமே ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பல லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில் வட வட கொரியாவில் ஒருவருக்குக்கூட குழந்தை தொற்று ஏற்படவே இல்லை. அது மட்டுமல்லாமல் வடகொரியாவில் வசித்து வரும் மக்கள் யாருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
Exams Daily Mobile App Download
மேலும் வட கொரிய அரசு தடுப்பூசி சலுகைகளை நிராகரித்தது. கடந்து 2020ஆம் ஆண்டு முதல் நேற்று வரை வடகொரியாவில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்பட வில்லை. ஆனால் இன்று ஒரே ஒருவர் மட்டும் வட கொரியா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வடகொரியா நாடு முழுவதும் கண்காணிக்க அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வேகமாக பரவக்கூடிய நோய் என்பதன் காரணமாக கொரோனா வைரஸை உடனடியாக தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை நாட்டிலிருந்து உடனடியாக அகற்றுவதே நாட்டின் குறிக்கோள் எனவும் அதிபர் கூறியுள்ளார்