தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை? ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

0
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை? ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை? ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை? ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு மாநில ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும், நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அடுத்த 9 நாட்களில் 6 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!

இவ்வாறு காலம் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு நடத்தப்படும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக டிசம்பர் மாதம் திருப்புதல் தேர்வு மற்றும் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அரையாண்டு தேர்வாக நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வு வரும் டிச.24ம் தேதியோடு முடிவடைகிறது.

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – அடுத்த ஆண்டு முதல் அமல்?

இந்நிலையில் அரையாண்டு தேர்வுக்கு வழங்கப்படும் விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு விடுமுறை நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வர உள்ளதால் விடுமுறை வழங்கக்கோரி மாநில ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது டிச.24ம் தேதி தேர்வு முடிவடைவதால் டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை விடுமுறை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!