அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – அடுத்த ஆண்டு முதல் அமல்?
அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் தற்போது வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் அனைத்து தொழில் நிறுவனங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் பணிபுரிகின்றனர். எனவே அரசு ஊழியர்களுக்கு ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
வாரத்துக்கு 4 நாள் வேலை:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு ஊழியர்களால் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. அதனால் தற்போது அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையை முழுமையாக செய்யாத நாளுக்கும் சேர்த்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து தொழில் நிறுவனங்களில் 48 மணி நேரம் வீதம் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு அலுவலகங்களில் தற்போது வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக நடைபெற்று வருகிறது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இதனை தொடர்ந்து ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அரசு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் படி 48 மணி நேரத்தை ஈடு செய்யும் விதமாக ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்று வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் பார்த்தால் போதும், மீதம் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும். அத்துடன் அந்த விடுமுறை நாளுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் அனைவராலும் 12 மணி நேரமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது. அதனால் இதனை அரசு ஊழியர்களிடம் ஒப்புதல் பெற்று பின் செயல்படுத்த வேண்டும்.
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்!
மேலே குறிப்பிட்டவற்றை எல்லாம் உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின் மசோதா தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மசோதா அடுத்த மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பார்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படும். இதனை 2022 – 23 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் ஆலோசித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.