சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.அந்த வகையில் இன்று சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை எட்டி உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை குறைவு:
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வந்தனர். அந்த வகையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மக்கள் பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகின்றனர். முக்கிய முதலீடாக மக்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இந்தியாவில் தென் மாவட்டங்களில் வசிக்கும் பெண்கள் அதிக அளவில் நகை விரும்பிகளாக இருப்பர். அதனால் அதிக தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். தங்கத்தின் தேவை அதிகரிப்பதனால் அதன் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. அப்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கம் அதிகம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்.
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்!
டிசம்பர் மாத தொடக்கத்திலும் தங்க விலை சற்று குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, சவரன் ரூ.36,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,537-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கு இணையாக விரும்பப்படும் வெள்ளி நகை சில்லறை வர்க்கத்தில் ரூ.65.80-க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் தங்கம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவர்.