5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்!
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
கிராம உதவியாளர்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் மாவட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராம உதவியாளர்
காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்னர் தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: BC/MBC/BCM 01.07.2021 தேதிப்படி 21 முதல் 34 வயதும், SC/SCA/ST வகுப்பினருக்கு 37 வயதும், இதர பிரிவினருக்கு 32 வயதும் வயது வரம்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து வட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2021
இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021122023.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.