தமிழகத்தில் 7,255 பேருக்கு எச்3என்2 வைரஸ் காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

0
தமிழகத்தில் 7,255 பேருக்கு எச்3என்2 வைரஸ் காய்ச்சல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தமிழகத்தில் 7,255 பேருக்கு எச்3என்2 வைரஸ் காய்ச்சல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தமிழகத்தில் 7,255 பேருக்கு எச்3என்2 வைரஸ் காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழகத்தில் தற்போது எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் 7,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் எனவும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல்:

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது எனவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 76 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

#Breaking: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

மேலும், பல்வேறு நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தீவிரக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அதில், பரிசோதனை செய்யப்பட்ட 10.47 லட்சம் பேரில் 7,255 பேருக்கு எச்3என்2 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல் உள்ளவர்கள் அனைவரும் வீட்டிலேயே 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் பதட்டப்பட தேவையில்லை எனவும், ஆக்சிஜன், மருந்துகள் என அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!