இந்தியாவில் தீவிரமடையும் பெட்ரோல் தட்டுப்பாடு? மத்திய அரசின் விளக்கம்!
இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எரிபொருள் பற்றாக்குறை சூழலுக்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி குறைக்கப்படுவதாக வெளியான செய்திகளை நம்பி பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற சம்பவம் நடந்திருக்கிறது.
விலை உயர்வு:
சமீப காலமாக இந்தியாவில் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு காணப்பட்டு வருவதால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருகிறது. இந்த அதிரடியான விலை உயர்வானது வாகன ஓட்டிகளை பெரிதாக பாதித்துள்ள நிலையில், பொது மக்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த இருப்பதாகவும், இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் போலியான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த தகவலை நம்பிய பலரும் எரிபொருள்களை நிரப்பி வைப்பதற்காக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட நெடு வரிசையில் காத்திருந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கிறது. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு தொடர்பான தகவல், சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து காஸ்மீரில் உள்ள பொது மக்கள் பலரும் எரிபொருள் நிலையங்களுக்கு தங்களது வாகனங்களுடன் படையெடுத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனை கவனித்த மத்திய அரசாங்கம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது தேவையை விட அதிகமாக இருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளது.
திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஜூன் 18) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மார்க்கெட்டிங் அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அன்பான மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே! நம் நாட்டில் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்கிறது என்றும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது என்றும் மீண்டுமாக வலியுறுத்துகிறோம். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். நாங்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு சேவை செய்வதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.