விரைவில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!
தமிழகத்தில் சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள், சட்டப்பேரவை உரையின் போது உறுதி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை
தமிழகத்தில் 16 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தலைமையில் இன்று (ஜூன் 21) துவங்கி உள்ளது. இந்த கூட்டத்துக்கு தமிழக ஆளுநர் தலைமை உரையாற்றி துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னையில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும். தொடர்ந்து சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக்கு தனிக்குழு அமைக்கப்படும் என கூறிய அவர் மேலும் சில திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!
அதில் குறிப்பாக சென்னை மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையுள்ள உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும். தொடர்ந்து மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் உள்ள பழங்கால கோட்டைகளும், அரண்மனைகளும் பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அவை பாரம்பரிய சுற்றுலா தளமாக அமைக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
தவிர சென்னை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும். மேலும் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் விரைவுப்போக்குவரத்து அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும். தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப துணை நகரங்கள் உருவாக்கப்படும். அத்திக்கடவு – அவிநாசி திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் 125 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை அடைய முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.