தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை - ஆளுநர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை - ஆளுநர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இன்று தொடங்கி உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி வருகிறார். அதில் தமிழக அரசுப்பணிகளில் தமிழகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இன்று சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் முதல் உரையை வழங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய திட்டங்கள் பலவற்றையும் ஆளுநர் அறிவித்துள்ளார். ஆளுநர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும்.

2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!

தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழக அரசு அலுவலகங்களில் பிரமாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேரும் வகையில் உள்ள அரசின் ஆணைகளை மாற்றி அமைக்கவும், ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழை இந்திய அலுவலக மொழியாக அறிவிக்க மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு ஒன்றை நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோரை உறுப்பினராக கொண்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும், திவர ஆக்சிஜன் வழங்கும் பணிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!