தமிழகத்தில் அரசுப்பணியிடங்கள், 69% இட ஒதுக்கீடு – ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்!
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழக சட்டசபையில் இன்று கூடிய முதல் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கல்வி, அரசு பணிகளில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட 69% இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அறிவித்தது. இதை அடுத்து தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுபடுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு அளிக்கப்பட்டது.
விரைவில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!
இந்நிலையில் தமிழகத்தில் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா அச்சம் நிலவி வருவதால் தக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரையுடன் இந்த கூட்டத்தை தொடங்கினார். தனது உரையில் ஆளுநர் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்து வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகத்தில் கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் காவிரி – குண்டாறு இணைப்பு, அரசு பணிகளில் காலியாக உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான பணிகள் நியமனம் போன்ற பல அறிக்கைகளை அறிவித்தார். தற்போது இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
Interested in jobs
examsdaily i wish to this page happy,and also evry one person get the job allves success.
Hi i am interested pls your contact number