தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி – புதிய வடிவில் பாடங்கள்!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 2020-21 கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதாத நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் அரசுப்பணியிடங்கள், 69% இட ஒதுக்கீடு – ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்!
இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிது. இந்நிலையில் 2021-22 கல்வியாண்டு வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களை பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமும் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி பாடங்களில் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை ஆசிரியர்கள் மட்டுமே வகுப்புகள் எடுத்து வந்த நிலையில் தற்போது மாணவர்கள் பதிலளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சி மூலமாக ஆங்கிலத்திலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.