அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – இனி இதற்கு கட்டுப்பாடுகள்!
இலங்கையில் அரசு ஊழியர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர்கள்:
அனைத்து நாடுகளும் அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நாட்டில் சமூக வலைத்தளங்களில் அரசை பற்றி தவறாக விமர்சித்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு ஊழியர்களே அரசை பற்றி விமர்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நவ.26 முழு அடைப்பு போராட்டம் – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஊழியர்கள் அதிக அளவில் அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் விமர்சிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. நாட்டின் குறைகளை சரி செய்து நல்லதொரு அரசாங்கத்தை சரி செய்வது அரசு ஊழியர்களின் கடமையாகும். இத்தகைய சூழலில் அரசாங்கத்தை அரசு ஊழியர்களே விமர்சனம் செய்வது எவ்வாறு சரியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
மேலும் சமூக வலைதளங்கள் மூலம் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட தடை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி அரசாங்கத்தை விமர்ச்சித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அரசை பற்றி விமர்ச்சித்தவர்கள் பட்டியலை தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தயார் செய்து வருவதாகவும், அதனால் அரசு ஊழியர்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளை நீக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.