தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நவ.26 முழு அடைப்பு போராட்டம் – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை அதிகரித்து வருவதால் ஆடை தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் இத்தகைய நூல் விலை அதிகரித்தலை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்:
தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள் அடங்கிய ஊரில் திருப்பூர் மாவட்டமும் ஒன்று. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதிலும் பெருமளவிலான நிறுவனங்கள் ஆடை தயாரிப்பு தொழிலில் நிறுவனங்கள் ஆகும். கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் இயங்காமல் இருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களாகவே 100% பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை தொடர்ந்து ஆடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நூல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது நூல் விலையானது ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Post Office புதிய சேமிப்பு திட்டம் – ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2000 ரூபாய் வட்டி!
அதனால் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதித்துள்ளன. இத்தகைய விலை உயர்வை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உணர்த்த திருப்பூர் தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் போராட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் நவ.26ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நூல்விலை உயர்வு மற்றும் பருத்தி பதுக்கலை கண்டறியும் விதமாகவும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.