பெண் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் அதிரடி மாற்றம்!
பீகார் மாநிலத்தில் அரசு பெண் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான சட்ட வரைவு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஓய்வு பெறும் வயது:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆரம்பத்தில் 57 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆகவும் பிறகு 60 ஆகவும் உயர்த்தியது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அரசு பெண் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகளில் பாடத்திட்ட சீர்திருத்தம் அறிமுகம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
அம்மாநிலத்தில் பெண்கள் ஓய்வு பெறும் வயதை 60 திலிருந்து 50 ஆக குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான முன்மொழிவு விவாதம் அடுத்த கட்டத்தில் உள்ளதாக சமூக பாதுகாப்பு துறை செயலாளர் கூறினார். மேலும் விரைவில் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்காக அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜார்கண்டில் கூடுதலாக 18 லட்சம் பேர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.