10 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகளில் பாடத்திட்ட சீர்திருத்தம் அறிமுகம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
கேரளாவில் உள்ள பள்ளிகளில் விரிவான பாடத்திட்ட சீர்திருத்தம் குறித்து புதிய புத்தகங்களுக்கு பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் மாற்றம்:
கேரளாவில் மாநில பள்ளிகளில் விரிவான பாடத்திட்ட சீர்திருத்தம் குறித்து புதிய புத்தகங்களுக்கு பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்து இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் வி.சிவின்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பாடத்திட்ட வழிகாட்டுதல் குழு 173 தலைப்பு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 1,3,5,7 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்ட சீர்திருத்தம் கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பின் 2013 ஆம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுகளாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை தற்போது 2023 ஆம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி இருப்பதாகவும், ஒன்றரை ஆண்டு கால செயற்பாடு இது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.