அரசு பள்ளி ஆசிரியர்களின் தமிழ் வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் – விரைந்து வெளியிட கோரிக்கை!
தமிழகத்தில் தையல் ஓவியம் உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் காலதாமதம் ஆகி வருகிறது. இதனை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்வு பட்டியல்:
தமிழக அரசு பள்ளிகளில் தையல் ஓவியம், இசை, உடற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அண்மையில் இது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தார். அத்துடன் பணி நிரந்தரம் தொடர்பாக விரைவில் ஆலோசிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த நிலையில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் மொழி ஒதுக்கீடு பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. தேர்வு நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியல் வெளியாகாமல் உள்ளதால் தேர்வுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிகரிக்கும் ஓய்வூதியத்தொகை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பட்டியலை வெளியிடவில்லை என்று கூறினர். தற்போது எந்த வழக்கும் இல்லை. இத்தகைய சூழலில் தமிழ் வழி ஒதுக்கீடு இறுதி தேர்வு போட்டிகளில் ஆசிரியர் வாரியம் விரைந்து வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.