அரசின் அலட்சியத்தால் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை – பொதுமக்கள் கோரிக்கை!

0
அரசின் அலட்சியத்தால் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை - பொதுமக்கள் கோரிக்கை!
அரசின் அலட்சியத்தால் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை - பொதுமக்கள் கோரிக்கை!

அரசின் அலட்சியத்தால் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை – பொதுமக்கள் கோரிக்கை!

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது சேவை மின்கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அதிக மின்கட்டணம் செலுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண குளறுபடி:

தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண விகிதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது சேவை பிரிவுகளுக்கு தனிப்பட்ட கட்டண விகிதத்தை அமல்படுத்தியது. இதன் பிறகு 2023 ஜூலை மாதம் இது போன்ற பொது சேவை பிரிவுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15 மற்றும் நிரந்தர கட்டணம் ரூபாய் 102 ஆக உயர்த்தப்பட்டது. இதன் பிறகு மக்களின் கோரிக்கையை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகும் லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கான பொது சேவை மின்கட்டணத்திற்கு ஒரு யூனிட் ரூபாய் 5.50 ஆக குறைத்தது.

மீண்டும் ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம் இதோ!!

இதற்கு “1.இ”என்ற புதிய கட்டணம் விகிதம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழக மின்வாரியம் ஆனது இணைப்பு பணிகளை ஆய்வு செய்து குடியிருப்பு பிரிவுகளுக்கான பொது சேவை பெயர்களை முறையாக மாற்றும் பணியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இப்பணிகள் முழுவதுமாக முடிவடையாத நிலையில் மின் நுகர்வோர்கள் பலரும் முன்னதாக இருந்த உயர்த்தப்பட்ட ஒரு யூனிட் கட்டணமான ரூபாய் 8.15 செலுத்தும் நிலை தற்போது நீடித்து வருகிறது. எனவே மின் கட்டணம் விகிதத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!