அரசு பள்ளிகளுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை – புதிய அறிவிப்பு வெளியீடு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வார விடுமுறையாக ஞாயிற்று கிழமைக்கு பதிலாக வெள்ளி கிழமை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறை குறித்து பாஜக சில புதிய வலியுறுத்தல்களை முன்வைத்துள்ளது.
பள்ளி விடுமுறை:
பொதுவாகவே பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை விடுவதுண்டு. ஆனால், பீகார் மாநிலத்தில் வார இறுதி விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறையாக ஞாயிற்று கிழமைக்கு பதிலாக வெள்ளி கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முஸ்லீம்கள் வசித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதிலும் முஸ்லீம்கள் அதிகமாக வசித்து வரும் போதியா பிளாக்கில் உள்ள 16 பள்ளி கூடங்களும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வைஷாலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சுபாஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார். அதாவது, பீகாரில் மட்டுமே 75,000 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் புனியாவில் 200 பள்ளிகளும், அராரியாவில் 229 பள்ளிகளும், கதிஹாரில் கிட்டத்தட்ட 100 பள்ளிகளும், கிஷன்கஞ்சில் 37 பள்ளிகளும் இந்த விடுமுறை முறையை பின்பற்றி வருகின்றன.
வருமான வரி தாக்கல் செய்ய நாளையே (ஜூலை 31) கடைசி நாள் – மீறினால் அபராதம்
மேலும், பீகார் மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் தான் முஸ்லீம்களாக இருக்கின்றனர். இந்த முஸ்லீம்களுக்காக பள்ளியின் விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது, அனைத்து மத குழந்தைகளையும் ஒரே மாதிரியாக தான் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் அரசுப் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான வாராந்திர விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தி வருகிறது.
School exam leave