தமிழகத்தில் சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பிற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
பதிவுத்துறை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு மானிய கோரிக்கை விவாதத்தின் போதும் துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8760.83 கோடி கூடுதலாக, அதாவது ரூபாய் 1,04,970.06 கோடி வருவாயாக பெறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட ரூபாய் 3270.57 கோடி அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிக வரித்துறையில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
வணிக வரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கை பிரிவு உருவாக்கப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST PRIME என்ற மென்பொருள் ரூபாய் 47.20 லட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும். திருமண சான்றிதழ் திருத்தம் செய்வதற்காக இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி ரூபாய் 6 லட்சம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும். அரசிற்கு வரவேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.