தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் 5 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அதனால் தகுதியானவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்த காரணத்தால் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் வயது வரம்பாக 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/