தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. அத்துடன் கொரோனா பரவலின் 3ம் அலையின் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் கடந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!
இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை என 48 நாட்கள் கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்று உள்ளது. அதனால் இந்த ஆண்டு குறைவான நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.