தமிழக அரசு மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி – பட்ஜெட் அறிவிப்பு!
தமிழக அரசு இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தொகையான ரூ.2,756 கோடியை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பதவியேற்றுள்ள திமுக தலைமையிலான ஆட்சியில் இன்று 2021 -2022ம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவிக்க இருக்கும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் குறித்து மக்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். அந்த வகையில் இனி முன்னர் போல் இல்லாமல் டிஜிட்டல் முறையில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் மேஜையிலும் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், நாட்கள் அதிகரிப்பு – பட்ஜெட் தாக்கல்!
திமுக அரசு மகளிருக்கு அதிக அளவிலான சலுகைகளையும், நலத்திட்டங்களையும் ஆட்சிக்கு வந்தது முதல் அறிவித்து வருகிறது. அதனால் பட்ஜெட்டிலும் மகளிருக்கு நல்ல பலன்களை தரும் திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில், இன்று காலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அளித்துள்ள கடன் தொகையான ரூ.2,756 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்காக கூட்டுறவு சங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக நிதி ஓதுக்கீடு செய்யப்படும் என்றும், முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும், முன்னதாக கடந்த ஆட்சியில் தேர்தலுக்கு முன்னதாக பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கு ரூ.12,110.74 கோடி நிதி மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.4,803.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்பினால் தமிழக மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர்.