தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், நாட்கள் அதிகரிப்பு – பட்ஜெட் தாக்கல்!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், நாட்கள் அதிகரிப்பு தொடர்பாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில், முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்து 3 மணி நேரம் தொடர் உரையாற்றினார்.
தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!
அதில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும். ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்யப்படும். குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
TN Job “FB Group” Join Now
ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும். கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும். ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும். காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும். ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என கூறினார்.