‘இது’ நடந்தால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில முதல்வர்!
மஹாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனின் அளவே, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முடிவு செய்யும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் கூறியுள்ளார்.
ஊரடங்கு முடிவு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் எதிர்பாராத அளவு உயர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிகை உச்சத்தை தொட்டது. ஏராளமான கொரோனா நோயாளிகள் ஆக்ஜிசன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தடுக்க 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி – பட்ஜெட் அறிவிப்பு!
மேலும் அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்து தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பரவல் ஓரளவு குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 15ம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இரவு 10 மணி வரை கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் போன்றவை இயங்கலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக உயர்ந்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஆக்சிஜனின் அளவே மீண்டும் ஊரடங்கை முடிவு செய்யும் எனவும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.