தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை 58 – லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சத்துணவு ஊழியர்கள்:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் நலன் அளிக்கும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அங்கன்வாடியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை தற்போது உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!
அதாவது அங்கன்வாடி பணியாளர்களுக்கு வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை 58 – லிருந்து 60 ஆகவும், உதவியாளர்களுக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 31 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!
அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழு இயக்குநர் சார்பில் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். தற்போது அதனை செயல்படுத்தும் விதமாக அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.