‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி என்கிற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை வெளியிட அவர் சீரியலை விட்டு விலகுவதாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் அருண்

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும், ஸ்வாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த பாரதியும் கண்ணம்மாவும் தற்போது 6 மாத காலம் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த காலங்களை கண்ணம்மா சந்தோஷமாக அனுபவித்து கொண்டிருக்க, வழக்கம் போல பாரதி இவற்றை வெறுத்து வருகிறார்.

ஜெனியை சர்ச் கூட்டி செல்லும் செழியன், வேலை செய்ய புதிய இடத்தை பார்த்து சொன்ன ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்தவாறு வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகினார். இவரை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் முக்கிய வில்லியாக கருதப்படும் நடிகை பரினாவும், தனது பிரசவத்துக்காக இந்த சீரியலை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறார்.

அதனால் இந்த தொடரில் கண்ணம்மா கதாப்பாத்திரத்துக்கு மட்டும் ரீபிளேஸ்மெண்ட் செய்துள்ள சீரியல் குழுவினர் வினுஷா என்கிற புது முகத்தை புதிய கண்ணம்மாவாக மக்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் இருந்து நடிகர் அருண் பிரசாத் விலக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, நடிகர் அருண் பிரசாத் தற்போது குலுமணாலி பகுதிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

கண்ணன் மீது தப்பு இல்லை என நிரூபித்த மீனா, மீனாவை பார்த்து பெருமைப்பட்ட ஜீவா – இன்றைய எபிசோட்!

இதனுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து, அருணாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரது சிகை அலங்காரமும் கூட மாற்றப்பட்டுள்ளது. இப்படி இருக்க நடிகர் அருண் பிரசாத் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுடன் கூடிய பதிவு தற்போது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகர் அருண் பிரசாத் விலகுகிறாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!