அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு!!
பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதியில் கொரோனா தடுப்பூசியை செலுத்த தவிர்த்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்று முதல்வர் முராத் அலி ஷா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சம்பளம் நிறுத்தம்:
உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா என்னும் உயிர்கொல்லி நோயினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் விகிதம் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
பாகிஸ்தானில் தற்போது வரை 9,26,695 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் மேலாக காணப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அங்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதியில் தற்போது வரை 15,50,553 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து கிடையாது – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது இது குறித்து பாகிஸ்தான் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா அவர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி தடுப்பூசி செலுத்த மறுக்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதற்கான உத்தரவு மாகாண நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.