10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து கிடையாது – மாநில அரசு அறிவிப்பு!!
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என்று ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு:
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் மே 4 முதல் 21ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக ஏப்ரல் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு தொடர்பான முடிவுகள் ஜூன் 1ம் தேதி கொரோனா நிலைமையை மறு ஆய்வு செய்து அதன் பிறகு அறிவிக்கப்படுவதாக கல்வித்துறை கூறியது.
TN Job “FB Group” Join Now
2021 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் அனைத்து செய்முறைத் தேர்வுகளும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாகவும், இது தொடர்பான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் அறிவித்தது. இந்நிலையில், கோவிட் -19 தொற்று அதிகரித்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்து ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா – 2,887 பேர் உயிரிழப்பு!!
பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்த அறிவிப்புகள் பொய்யானது. மாணவர்கள் அதனை நம் வேண்டாம் என்றும் கூறியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மே மாதம், தற்போதைய கொரோனா பரவல் நிலைமையில் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாநிலத்தில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்துவதற்கு விருப்பமாக உள்ளதாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்னர்.