மாநிலத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை – அருமையான வாக்குறுதி!

0
மாநிலத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை - அருமையான வாக்குறுதி!
மாநிலத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை - அருமையான வாக்குறுதி!
மாநிலத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை – அருமையான வாக்குறுதி!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் அருமையான வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

அரசு வேலை:

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசு அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கும் , மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை! விரைவில் அமல்!

மேலும் கொரோனா பரவல் உள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருக்கிறது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். அதனால் வேலைவாய்ப்பு குறித்து அம்மாநில முதல்வர் கோரக்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஒரு அருமையான வாக்குறுதியை அளித்துள்ளார். இவர் கூறியதாவது, தான் மீண்டும் ஆட்சி அமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டாயமாக வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் அல்லது சுயதொழில் தொடங்குவதற்காக உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!