தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்படுகிறது. இதையடுத்து தற்போது சிறுபான்மை நலத்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதியில் தூய்மை பணியாளர் இடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் குறைவான அளவே காலிப்பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வருகிற 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
PM கிசான் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 11வது தவணை பணம் எப்போது கிடைக்கும்?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் http://www.tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று கொடுக்கப்படுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இதனை பூர்த்தி செய்த பின் அந்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்ககளை பெற http://www.tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.