PM கிசான் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 11வது தவணை பணம் எப்போது கிடைக்கும்?
PM கிசான் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நான்கு தவணைகளில் 6 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை பணம் செலுத்திய நிலையில் 11 ஆவது தவணை மே 31 ஆம் தேதி வரவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
PM கிசான் திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) என்கிற ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரண்டாயிரம் வீதம் வழங்கப்படுகிறது. தற்போது வரை PM கிசான் திட்டத்தின் மூலமாக 10 தவணைகளில் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதனையடுத்து 11வது தவணைக்காக விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மே 31ம் தேதி 11வது தவணை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆவது தவணை கடந்த ஆண்டு மே மாதம் 15 அன்று வெளியிடப்பட்டது. விவசாயிகள் 11 ஆவது தவணையை பெற PM Kisan கணக்கில் EK வசிப்பிடத்தை குறிப்பிடுவது கட்டாயமாகும். மேலும் eKYC செயல்முறையை செய்து முடிக்காத விவசாயிகள் விரைவில் செய்து முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. PM கிசான் கணக்கின் eKYC செயல்முறையை செய்து முடிக்காதவர்கள் மே 31 ஆம் தேதிக்குள் செய்து முடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 18 வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
PM Kisan கணக்கின் eKYC செயல்முறையை இரண்டு வழிகளில் செய்து முடிக்கலாம். CSC மையத்திற்குச் சென்று eKYC செயல்முறையை செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் eKYC செயல்முறையை செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக செய்ய https://pmkisan.gov.in என்கிற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். அந்த முகவரியில் உள்ள e-KYC ன் விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்பு, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP எண்ணையும் பதிவு செய்து வெற்றிகரமாக சமர்ப்பிக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்து விட்டால் e-KYC செயல்முறையை முடித்து விடலாம்.