திறமையான மாணவர்களை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சி – 258.9 கோடி செலவில் புதிய திட்டம்!
அசாம் மாநிலத்தில் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு புதிய திட்டம் ஒன்றை 258.9 கோடி செலவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அரசின் முயற்சி:
மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் புதிதாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அரசின் புதிய திட்டங்களினால் மாணவர்களுக்கு அதிக பலன் கிடைப்பதால் மாணவர்களும் கூடுதல் கவனத்தோடு படிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய ஆலோசனை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. அதில், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 36,000 சிறந்த மாணவர்களுக்கு அஸ்ஸாம் அரசு ஸ்கூட்டர்களை வழங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 258.9 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் மாநில அமைச்சரவையில் வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – உற்சாகத்தில் பொதுமக்கள்!
Exams Daily Mobile App Download
அரசு அறிக்கையின் படி, மொத்தம் 35,800 மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனம் அளிக்கப்பட உள்ளது, இதில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 29,748 மாணவிகள் மற்றும் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்ற 6,052 மாணவர்களும் உள்ளனர். மேலும், இந்த வாகனத்திற்கான பதிவு மற்றும் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை மேற்கொள்வதற்க்கான செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.