மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? அரசு மறுப்பு!
கடந்த 2020ம் ஆண்டு முதல் 3 தவணைகளாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கூடுதல் கொடுப்பனவான அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி நிலுவை
மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தியாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 18 மாத அகவிலைப்படி (DA) பாக்கிக்கான பணம் வழங்கப்படாது என தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, கொரோனா தொற்று பரவலின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது 18 மாத டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதாவது ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை பிடித்தம் செய்யப்பட்ட டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் முடக்கப்பட்ட ஒன்றரை வருடத்திற்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, 3 தவணை அகவிலை நிவாரணப் பாக்கியை உடனடி நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை தற்போது மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி தொகை கடந்த மார்ச் மாதத்தில் 34% ஆக உயர்த்தப்பட்டது. இந்த தொகை எப்போது அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 18 மாதங்களாக, அதாவது 3 தவணைகளாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கூடுதல் கொடுப்பனவான அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.