திடீரென ராதிகாவை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வரும் கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்!ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு கோபி ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னையே நம்பி இருக்கும் பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை கோபி காதலித்து கொண்டிருக்கிறார். ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா அல்லது பாக்கியாவின் அருமையை புரிந்துகொண்டு கோபி மனசு மாறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் கோபியை பாக்கியா விழுந்து விழுந்து கவனித்தாலும் பாக்கியாவை கோபிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.
Exams Daily Mobile App Download
அதாவது பாக்கியாவை கட்டாயப்படுத்தி தான் கோபிக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பாக்கியா மீது கோபிக்கு துளி கூட காதல் இல்லை. ராதிகாவை தான் கோபி காதலித்து கொண்டிருக்கிறார். ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், பாக்கியாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால் பாக்கியா தாங்கிக்கொள்ள மாட்டார் என பயந்து ராமமூர்த்தி கோபியை கண்டித்து மட்டும் விட்டுவிடுகிறார்.
ஆனாலும் கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். எப்படியாவது ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நிறுத்தியே தீர வேண்டும் என ராமமூர்த்தி தாத்தா நினைக்கிறார். இப்படி இருக்கையில், திடீரென கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு துளி கூட பயம் இல்லாமல் வீட்டிற்கே அழைத்து வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபியை பார்த்து மிரண்டு போகும்படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.