தனக்கு பேச்சு வந்துவிட்டதாக கூறும் ராமமூர்த்தி தாத்தா – பயந்து நடுங்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
தனக்கு பேச்சு வந்துவிட்டதாக கூறும் ராமமூர்த்தி தாத்தா - பயந்து நடுங்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
தனக்கு பேச்சு வந்துவிட்டதாக கூறும் ராமமூர்த்தி தாத்தா - பயந்து நடுங்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
தனக்கு பேச்சு வந்துவிட்டதாக கூறும் ராமமூர்த்தி தாத்தா – பயந்து நடுங்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டாலும் ராமமூர்த்தி தாத்தாவால் பேச முடியவில்லை. இதனால் மட்டுமே கோபி தப்பித்து வந்தார். இந்நிலையில், ராமமூர்த்தி தாத்தா திடீரென பேசுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ள போகிற விஷயம் ராமமூர்த்திக்கு தான் தெரியும். ராமமூர்த்தி தாத்தா உண்மையை பாக்கியாவிடம் கூறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கோபி ராதிகாவை காதலிக்கிறார் என்பது தெரிந்ததுமே ராமமூர்த்தி கோபியை கண்டிக்கிறார். அப்போது பாக்கியாவை விவாகரத்து செய்து விடுவேன் என கோபி ராமமூர்த்தி தாத்தாவை மிரட்டுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா – இனி ஆல்யா மானசா என்ட்ரி?

கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டால் பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயந்து கோபியை பற்றி யாரிடமும் கூறாமல் மறைத்து விடுகிறார். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். இதனால் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என நினைத்து கோபியும் பாக்கியாவும் தான் கணவன் மனைவிகள் என்கிற விஷயத்தை ராதிகாவிடம் எப்படியாவது சொல்லியே தீரவேண்டும் என நினைத்து வீட்டில் கோபியும் பாக்கியாவும் ஒன்றாக இருக்கும் படியான ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு புறப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் ராமமூர்த்தி தாத்தா ராதிகா வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ராதிகா அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்று விடுகிறார். இதற்கு இடையே தாத்தா கோபியை பற்றிய உண்மையை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்ல முயன்ற போது படியில் இருந்து வழுக்கி விழுந்து பேச முடியாமல் போகிறார். இதனால் கோபி இஷ்டத்திற்கு ஆடி கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது ராமமூர்த்தி தாத்தா திடீரென பேசுவது போலவும், உண்மையை கூறிவிடுவாரோ என கோபி பயந்து நடுங்குவது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!