ராதிகாவை திருமணம் செய்துகொள்ள தயாரான கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் கோபி தற்போது மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதை போல சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாக்கியலட்சுமி கோபி
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த முன்னணி சீரியலான ‘பாக்கியலட்சுமி’ தற்போது பல்வேறு திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபியை உத்தம புருஷன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு, கோபி நம்பிக்கை துரோகம் செய்யும் விஷயம் இதுவரைக்கும் தெரியாது. அதே வேளையில் கோபியின் ரகசிய காதல், திருமணம் குறித்த விஷயங்களை அறிந்திருக்கும் ராமமூர்த்தி உண்மையை சொல்வதா, சொன்னால் பாக்கியா உடைந்து விடுவார் என்று இருதலை கொள்ளி எறும்பாக சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் பிப்.15க்கு பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
மறுபக்கத்தில் கோபியை சிறந்த அப்பாவாக 3 பிள்ளைகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலுக்கு மத்தியில் கோபி தனது பாலிய கால காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்து வருகிறார். இப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எதிர்பாராத விதமாக கோபியின் அப்பா ராமமூர்த்தி கீழே விழுந்து வாய் பேச முடியாமல் போகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளஎண்ணும் கோபி, பாக்கியாவிடம் விவாகரத்து பெறுவதற்கு தயங்கி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில், கோபியின் அப்பாவை சந்திக்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், மயூவை விட்டு கோபி விலக வேண்டும். இல்லையென்றால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!
இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களத்தில் அடுத்ததாக என்ன ட்விஸ்டு இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோபி பட்டு, வேஷ்டியில் மாப்பிள்ளை தோரணத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கோபி, ஒருவேளை ராதிகாவை திருமணம் செய்து கொண்டாரா என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.