தமிழகத்தில் பிப்.15க்கு பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் வருகிற 14 ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
முதல்வர் ஆலோசனை:
நாடு முழுவதும் கொரோனவால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளும் முயற்சி செய்து பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதுவரை இரண்டு அலைகளை மாநில அரசுகள் கடந்து வந்த நிலையில் இறுதியாக மூன்றாம் அலையில் உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் வீரியம் முந்தைய பாதிப்புகளை போல் இல்லாமல் அதிகமாகவே இருந்தது.
மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு முக்கிய முடிவு!
அதனால் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கின்றனர். தமிழகத்திலும் கடந்த மாதம் வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டது. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் பிப். 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!
இந்நிலையில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது குறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் வருகிற பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், தலைமை செயலாளர், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.