பாக்கியாவை மனம் மாறி வீட்டிற்கு அழைக்கும் கோபி, வர மறுக்கும் பாக்கியா – அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ஏமாற்றிய உண்மை எல்லாம் தெரிந்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். இந்நிலையில் பாக்கியா, ஈஸ்வரி மற்றும் இனியா என எல்லாரும் அழைத்தும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் கோபி சென்று பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி இதுவரை குடும்பத்தை ஏமாற்றி வந்த நிலையில், தற்போது பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வந்துள்ளது. மேலும் பாக்கியாவின் நெருங்கிய தோழி ராதிகா உடன் தான் கோபி பழகி வருகிறார் என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது. அதனால் மனம் உடைந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். பாக்கியா வீட்டில் இல்லாமல் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இனியா அம்மா இல்லாமல் அழுது கொண்டே இருக்க நான் சென்று அம்மாவை கூப்பிட்டால் அம்மா வருவார் என இனியா நம்பிக்கை உடன் சென்று கூப்பிடுகிறார். ஆனால் இனியா கெஞ்சி கேட்டும் பாக்கியா மனம் மாறவில்லை. அதனால் மனம் வருத்தப்பட்ட இனியா கோபியை காரணம் சொல்கிறார். பின் ஈஸ்வரி நான் சென்று கூப்பிடுகிறேன் என சொல்லி பாக்கியாவின் அலுவலகத்திற்கு செல்கிறார். கோபி செய்தது தவறு தான் அதனால் எங்களை ஏன் தனியாக விட்டுவிட்டாய் என ஈஸ்வரி கேட்டும் பாக்கியாவின் மனம் இறங்கவில்லை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்தின் வைரல் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
அதனால் கோவப்பட்ட ஈஸ்வரி, பாக்கியா இனிமேல் இங்கே வரமாட்டேன் என சொன்னால் உன்னை விட்டு நாங்க எல்லாரும் சென்றுவிடுவோம் என கோபியிடம் சொல்கிறார். நாங்க இறந்தால் கூட எங்களது முகத்தில் நீ முழிக்க கூடாது என ஈஸ்வரி சொல்ல, கோபிக்கு பயம் வருகிறது. அதனால் பாக்கியாவை கூப்பிட கோபி பாக்கியாவின் அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் பாக்கியா கோபியிடமும் வர முடியாது என சொல்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.