‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்தின் வைரல் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தனத்தின் வைரல் வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தனத்தின் வைரல் வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தனத்தின் வைரல் வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்தின் வைரல் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா, இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தனது கதைகேளு கதைகேளு என்ற தனது YOUTUBE சேனலில் குடலை இட்லி குறித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் 4 அண்ணன் – தம்பிகளை சுற்றி தான் மொத்த கதையுமே. இத்தனை நாட்களாக இந்த குடும்பம் எவ்வளவோ பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. இந்த குடும்பத்தை பிரிக்க இதுவரை பலரும் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அண்ணன் – தம்பிகளின் ஒற்றுமை பிரிந்தது இல்லை. ஆனால் மீனா அப்பாவால் வந்த சண்டையால் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். இதனால் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டில் ஓய்வில் உள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை தனம் தான் மூர்த்தி இடத்தில் இருந்து பொறுப்பாக பார்த்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட் காஞ்சிபுரத்தில் உள்ளது. தற்போது சூப்பர் மார்க்கெட் சம்பந்தமாக சீன்ஸ் வருவதால், ஷூட்டிங்கிற்காக சுஜிதா காஞ்சிபுரம் வந்திருக்கிறார். அப்போது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான “காஞ்சிபுரம் கோவில் இட்லி” குறித்து தனது YOUTUBE சேனலில் (கதைகேளு கதைகேளு) பதிவிட்டுள்ளார். காஞ்சிபுரம் கோவில் இட்லி பார்ப்பதற்கு இட்லி போல இல்லாமல் குழாய் புட்டைப் போலவே இருக்கும். இதை டம்ளர் இட்லி என்றும் குடலை இட்லி என்றும் அழைக்கிறார்கள்.

மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி – அடுத்து பாக்கியாவின் நிலை என்ன ஆகும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இதைப் பார்க்க கோவில் கோபுரம் போலவே இருப்பதால் இது கோவில் இட்லி என்று அழைக்கப்படுகிறது சாதாரண இட்லிக்கும் இந்த கோவில் இட்லிக்கும் வித்தியாசம், இதன் தோற்றம் மட்டும் இல்லை. இதைத் தாண்டி இதில் பயன்படுத்தப்படும் மாவு தான். மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம் என்று பல உடலுக்கு மிகவும் ஏற்ற மசாலா பொருட்கள் நிறைந்த இந்த இட்லியை இரண்டு நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாமாம். இந்த இட்லியைத் காஞ்சிபுரத்தில் எப்படி தயார் செய்கிறார்கள் என்பதையும் கவரேஜ் செய்து சுஜிதா தன் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!