மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி – அடுத்து பாக்கியாவின் நிலை என்ன ஆகும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு பாக்கியா வெளியேறி உள்ளார். இந்த நிலையில் கோபி திருந்தி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் கதையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி:
கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து அடுத்து என்ன நிகழும் என்று எதிர்பார்ப்பில் கதை சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில எபிசோடுகளில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி அவர் கேட்டரிங் நடத்தும் இடத்திற்கு சென்றிருந்தார். பாக்கியா கூடவே எழிலும், செல்வி அக்காவும் சென்றனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை நினைத்து மிகவும் கவலைப்படுகின்றனர். இன்னொரு புறம் ஈஸ்வரி அம்மா மீண்டும் பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து வர பாக்கியாவை பார்க்க செல்கிறார். அவருடன் எழிலும் கூட செல்கிறார். அதற்குள் இனியா பாக்கியாவிற்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி சொல்கிறார். ஆனால் பாக்கியா அவரிடமும் நான் வீட்டுக்கு வரமாட்டேன் என்று பதில் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு பிரச்சனை நடந்தும் கோபி இன்னும் திருந்தவில்லை. ராதிகாவின் மகள் மயூ கோபிக்கு போன் செய்கிறார். அப்போது பதறி போய் கோபி போனை எடுக்கிறார். மேலும் மயூவிடம் உன்னையும் ராதிகாவையும் பார்க்க விரைவில் வருகிறேன் என்று சொல்கிறார். மும்பை இல்லை எந்த நாட்டிற்கு சென்றாலும் வந்து பார்ப்பேன் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். அதற்குள் ராதிகா வருவதை பார்த்த மயூ உடனே போனை கட் செய்கிறார். இதிலிருந்து இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கோபி ராதிகாவை விடப்போவதில்லை என்று தெரிகிறது.
புது சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” செழியன் ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்!
இன்னொருபுறம் அம்மா பாக்கியாவை நினைத்து இனியா அழ கோபி அவரை சமாதானப்படுத்துகிறார். உடனே இனியா உங்களால் தான் அம்மா வீட்டை விட்டு போனாங்க என்று கூறி மொத்த கோபத்தையும் கோபி மீது காட்டுகிறார். இந்த நிலையில் சமையல் குடோனில் இருக்கும் பாக்கியாவை ஈஷ்வரி அம்மா கவலையுடன் சென்று பார்க்கிறார். பாக்கியாவை வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். ஆனால் பாக்கியா வரமாட்டேன் என்று மறுக்கிறார். ஈஷ்வரி அம்மா விடுவதாக இல்லை, கோபிக்காக அவர் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து பாக்கியா எடுக்கப் போகும் முடிவு என்ன? பாக்கியா வீட்டிற்கு வந்தால் கோபி ராதிகாவுடன் எப்படி சேருவார்? இது போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிசோடுகளில் விடை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.